சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 06 FEB 2023 4:04PM by PIB Chennai

இந்திய தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு பின்வரும் வழக்கறிஞர்களை சென்னை, அலகாபாத் மற்றும் கர்நாடக மாநில உயர்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமிப்பதாக குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.

     இதன்படி, வழக்கறிஞர்களான லெஷ்மண சந்திர விக்டோரியா கௌரி, பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி பாலாஜி, கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், நீதித்துறை அதிகாரிகளான  ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல், சையத் கொமார் ஹசன் ரிஸ்வி, மனீஷ்குமார் நிகம், அனிஷ் குமார் குப்தா, நந்த் பிரபா சுக்லா, ஷிடிஜி ஷைலேந்திரா, வினோத் திவாகர் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

     மேலும், வழக்கறிஞர்கள் விஜய்குமார் அடகௌடா பாட்டில், ராஜேஷ் ராய் கலங்கலா ஆகியோர் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

******

 

AP/ES/UM/RR


(रिलीज़ आईडी: 1896664) आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi