எஃகுத்துறை அமைச்சகம்

மாங்கனீசு தாது இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜனவரி மாதத்தில் சிறந்த உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது

Posted On: 04 FEB 2023 4:59PM by PIB Chennai

ஜனவரி, 2023-ல் 1.26 லட்சம் டன் மாங்கனீசு தாது உற்பத்தியுடன், மாங்கனீசு தாது இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜனவரி மாதத்தில் தனது சிறந்த உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 7.7 சதவீதம் அதிகமாகும்.

ஜனவரி, 2023-ல் 1.32 லட்சம் டன் மில்லியன் தாது விற்பனையானது. இது  கடந்த 2022 ஜனவரியை விட 31 சதவீதம் அதிகமாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு அஜித் குமார் சக்சேனா,  கடந்த சில மாதங்களில் மாங்கனீசு தாது இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செயல்திறன் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இந்த நிதியாண்டில்,  மேம்பட்ட செயல்திறனுக்காக நிறுவனம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

மாங்கனீசு தாது இந்தியா லிமிடெட் நிறுவனம்  லிமிடெட் என்பது இந்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நாட்டின் மிகப்பெரிய அளவில் மாங்கனீசு தாது உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். மேலும் இந்த நிறுவனம் உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 45 சதவீதம் பங்களிக்கிறது. இது மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பதினொரு சுரங்கங்களை இயக்குகிறது.

வரும் 2030-ம் ஆண்டிற்குள் அதன் உற்பத்தியை  3.00 மில்லியன் டன்களாக இரட்டிப்பாக்க வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடன் செயல்பாடு வருகின்றது. மேலும் இந்த நிறுவனம் குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும், மத்திய பிரதேச மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வணிக நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.

---------



(Release ID: 1896339) Visitor Counter : 279


Read this release in: English , Urdu , Hindi