மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் மேக் இன் இந்தியா

Posted On: 16 DEC 2022 1:38PM by PIB Chennai

நாட்டில் மின்னணு உற்பத்திச் சூழலை விரிவுப்படுத்துவதே மத்திய அரசின் இலக்காகும். இந்நிலையில், தேசிய மின்னணுவியல் கொள்கை 2019, மின்னணுவியல் அமைப்பு, வடிவமைப்பு, உற்பத்திக்கான முதன்மை மையமாக இந்தியாவை உருவாக்க வகை செய்கிறது.

பெருமளவில் மின்னணு உற்பத்திக்கான, உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட்ட 16 நிறுவனங்கள், ரூ.10,50,000 கோடிக்கும் அதிகமாக  மொத்தம் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில், இந்த மொத்த உற்பத்தியில், 60 சதவீதம்,  ஏற்றுமதி ஆர்டர்கள் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்புதல் பெறப்பட்ட நிறுவனங்கள், மின்னணு உற்பத்தியில், ரூ.11,000 கோடி அளவுக்கு கூடுதல் முதலீட்டைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட பிஎல்ஐ திட்டத்தின் கீழ், மொபைல்போன், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தியில், வெற்றி கிட்டியதை அடுத்து, பெருமளவிலான மின்னணு உற்பத்திக்கான  2-ம் கட்ட பிஎல்ஐ திட்டம்,  11.03.2021-ல் தொடங்கப்பட்டது.

2022 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், உற்பத்தி ரூ.2,03,952 கோடியாகவும்,  முதலீடு  ரூ.4,784 கோடியாகவும்“ ஏற்றுமதி ரூ.80,769 கோடியாகவும்,  கூடுதல் வேலைவாய்ப்பு 40,916 ஆகவும் இருந்தது.

ஐடி வன்பொருள் பிஎல்ஐ திட்டம் 2021 மார்ச் 3-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில்  14 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 2022 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், உற்பத்தி ரூ.4,138 கோடியாகவும், முதலீடு ரூ.129.68 கோடியாகவும், கூடுதல் வேலைவாய்ப்பு 514 (நேரடி  வேலை) ஆகவும் இருந்தது.

மாநிலங்களவையில் இன்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884069

**************

AP/PKV/KPG/KRS



(Release ID: 1884169) Visitor Counter : 137


Read this release in: English , Urdu