ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வேயில் அனுமதி வழங்கப்பட்ட 2,843 கிலோமீட்டர் தொலைவு பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் 1,610 கிலோமீட்டர் தொலைவுப் பணிகள் நிறைவு

Posted On: 09 DEC 2022 3:48PM by PIB Chennai

ரயில்வே அமைச்சகம் 2 அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்களை (டிஎஃப்சி) அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக  லூதியானா முதல் சோன்நகர் வரையிலான 1,337 கிலோமீட்டர் தொலைவு கிழக்கு பிரத்யேக சரக்கு வழித்தடமும், ஜவஹர்லால் நேரு துறைமுக முனையத்திலிருந்து தாத்ரி வரையிலான 1,506 கிலோமீட்டர் தொலைவு  மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடமும் அமைக்கப்படுகிறது. மொத்தம் 2,843 தொலைவு இரண்டு பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் தற்போது 1610 கிலோமீட்டர் தொலைவு வரை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளன.  இவ்விரு முனையம் அமைக்கப்படுவதுடன் சரக்கு ரயில் போக்குவரத்துத் திறன் மேம்படுத்தப்படும். அதே போல், அதிக அளவிலான சரக்குகளும் கையாளப்படும்.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

**************

AP/ES/KPG/IDS


(Release ID: 1882182)
Read this release in: English , Urdu , Marathi