ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

प्रविष्टि तिथि: 12 AUG 2022 5:43PM by PIB Chennai

ஆயுஷ் துறையை டிஜிட்டல் மயமாக்க, தொழில்நுட்ப ஒத்துழைப்பை அளிப்பதற்காக, ஆயுஷ் கிரிட் திட்டத்தின்கீழ், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கிடையே, 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2019-ம் ஆண்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகும். இந்த ஒப்பந்தத்தில், ஆயுஷ் அமைச்சகம் சார்பாக அதன் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பாக அதன் செயலாளர் திரு.அல்கேஷ் குமார் சர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு அமைச்சகங்களும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவது என்றும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள நிறுவனங்களுடன் இணைந்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் ஆயுஷ் கிரிட் திட்டத்துக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851293

***************


(रिलीज़ आईडी: 1851353) आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी