பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்

Posted On: 08 AUG 2022 3:07PM by PIB Chennai

பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாதுகாப்புத் திறன் கட்டமைப்புக்கான புதுமை கண்டுபிடிப்புகள் திட்டத்தை அரசு தொடங்கியது.  குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், தனி நபர் கண்டுபிடிப்பாளர்கள்,  கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை இதில் ஈடுபடுத்தும் வகையில் இது தொடங்கப்பட்டது.  இந்த கட்டமைப்பின் கீழ் இதுவரை பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்களின் 7 பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 

 இதுவரை  136 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 102 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக 2021-2022 ஆம் ஆண்டில் இருந்து  2025-26-ம் நிதியாண்டு வரை 5 ஆண்டுகளுக்கு  ரூ.498.78 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தகவலை மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் உறுப்பினர்  திரு சந்தோஷ் குமாருக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின் போது தெரிவித்தார்.

***************

(Release ID: 1849790)


(Release ID: 1849864) Visitor Counter : 194
Read this release in: English , Urdu