தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தேசிய அகண்ட அலைவரிசை இயக்கத்தின் முன்னேற்றம்

Posted On: 22 JUL 2022 1:09PM by PIB Chennai

தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் கிராமங்களுக்கு  அகண்ட அலைவரிசை இணைப்புகளை வழங்கி வருகிறது. பாரத் நெட் திட்டத்தின் கீழ் ஜூன் மாதம் வரை 1,77,550 கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு அகண்ட அலைவரிசை சேவை வழங்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்குள் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு அப்பால் அனைத்து கிராமங்களுக்கும் இச்சேவையை விரிவுப்படுத்த பாரத் நெட் திட்டமிட்டுள்ளது.

அகண்ட அலைவரிசையின் வேகத்தை அதிகரிக்கவும், திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தரவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது.

அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குவோர், பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்கனவே பதித்துள்ள பைஃபர் கேபிள்களை பயன்படுத்தி புதிய இணைப்புகளை வழங்கவும், கோபுரங்களை அமைக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மத்திய  தொலைதொடர்பு துணை இணை அமைச்சர்  திரு தேவுசிங் சவுகான், மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்

***************



(Release ID: 1843964) Visitor Counter : 201


Read this release in: English , Urdu