தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

அஞ்சல் நிலைய கட்டமைப்பை மேம்படுத்த பணிக்குழு

Posted On: 22 JUL 2022 1:05PM by PIB Chennai

அஞ்சல் நிலைய கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான  பணிக்குழுவின் பரிந்துரையை ஏற்று இந்தியா அஞ்சல் நிலைய வங்கி, 100 சதவீத அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமாக அஞ்சல்துறையின் கீழ் உருவாக்கப்பட்டது. மேலும், பார்சல் வணிகத்தை கையாள துறையில் பார்சல் இயக்குநரகமும் அமைக்கப்பட்டது. இதற்காக பொது சேவை மையத்துடன் அஞ்சல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது. அரசின் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்க 1.16 லட்சத்துக்கும் அதிகமான அஞ்சல் நிலையங்கள் மற்றும் பொதுச்சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பணிக்குழுவின் பரிந்துரைக்கேற்ப அஞ்சல் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சல் நிலைய ஆதார் மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் தொலைதூர பகுதிகளிலும், மக்களை மையப்படுத்தும் பல்வேறு சேவைகளை வழங்கும் அரசின் முக்கிய பிரிவாக அஞ்சல் நிலையம் தற்போது மாறியுள்ளது.

மத்திய  தொலைதொடர்பு துணை இணை அமைச்சர்  திரு தேவுசிங் சவுகான், மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்

***************



(Release ID: 1843957) Visitor Counter : 162


Read this release in: English , Urdu , Urdu , Gujarati