தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தற்சார்பு இந்திய வேலைவாய்ப்பு திட்டத்தின் பயனாளிகள்

Posted On: 21 JUL 2022 2:45PM by PIB Chennai

கொவிட்-19 தொற்று காலத்தில் வேலையை இழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், ஊக்கத்தொகை அளிப்பதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தற்சார்பு இந்திய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனத்தில் மாதம் ரு.15,000-க்கு கீழே ஊதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின்படி பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர். 

இத்திட்டத்தின்கீழ் 13.07.2022-ன்படி, நாடு முழுவதும் 59.54 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மொத்தம் 75.11 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் பதிவு செய்துகொள்வதற்கான காலம் 30.06.2021-லிருந்து 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டது.

இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843402

***************



(Release ID: 1843487) Visitor Counter : 171


Read this release in: English , Urdu