வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவை நினைவுகூரும் வடகிழக்கு திருவிழா

Posted On: 29 APR 2022 3:54PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகமும் மேகாலயா அரசும் இணைந்து, வடகிழக்கு கவுன்சில், இந்திய மேலாண்மை கல்விக் கழகம் ஷில்லாங், இன்வெஸ்ட் இந்தியா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவை நினைவுகூரும் வடகிழக்கு திருவிழா, ஏப்ரல் 29 அன்று ஷில்லாங்கில் நடைபெற்றது.  வடகிழக்கு முதலீட்டு திறன் மற்றும் எதிர்கால எரிசக்தித் தேவைகள் என்பது பற்றிய மாநாடும் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திரு பி எல் வர்மா, மேகாலயா தலைமைச் செயலாளர் திருமதி ஆர் வி சுச்சியாங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் சிறப்பு அம்சங்களாக பல்வேறு அமைச்சகங்களின் திட்டங்கள், எதி்ர்காலத்திற்கான அவற்றின்  யோசனைகள் இடம் பெற்றன.

***************


(Release ID: 1821296)
Read this release in: English , Urdu , Manipuri