பாதுகாப்பு அமைச்சகம்

37 கண்டோன்மென்ட் பகுதியிலும், 12 ராணுவ மருத்துவமனைகளிலும் ஆயுர்வேத மையங்களை தொடங்க ஆயுஷ் அமைச்சகத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது

Posted On: 20 APR 2022 5:51PM by PIB Chennai

37 கண்டோன்மென்ட் பகுதியிலும், 12 ராணுவ மருத்துவமனைகளிலும் ஆயுர்வேத மையங்களை தொடங்க  ஆயுஷ் அமைச்சகத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது

குஜராத் மாநிலம் காந்தி நகரின் மகாத்மா மந்திரில் 2022 ஏப்ரல் 20 தொடங்கி 22 ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு உச்சிமாநாட்டின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.  தொடக்க நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.  உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் உடனிருந்தார். 

இந்த ஒப்பந்தங்களில் ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் திரு பிரமோத் குமார் பதக், ராணுவ மருத்துவமனைகளின் கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி சோனம் யாங்தோல் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

கண்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்கள், இந்த மருத்துவமனையை சார்ந்திருக்கும்  பொதுமக்கள் ஆகியோருக்கு ஆயுஷ் மையங்கள் பயனுடையதாக இருக்கும்.  இவை நாடுமுழுவதும் 2022 மே 1 –லிருந்து செயல்படும்.

***************



(Release ID: 1818467) Visitor Counter : 118


Read this release in: English , Urdu , Hindi