வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவீன நகரங்கள் இயக்கம் என்பது முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நகரங்களை மேம்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம், தூய்மை மற்றும் நிலையான சூழலை வழங்குவதாகும்.

Posted On: 07 APR 2022 1:31PM by PIB Chennai

நவீன நகரங்களுக்கான இயக்கம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன்  25-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது.  2016-ம் ஆண்டு  ஜனவரி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் வரை 4 சுற்று நடத்தப்பட்ட போட்டிகள் மூலம் 100 நவீன நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில்  4 நகரங்கள், அதாவது பாகல்பூர், பீகார் ஷெரீப், முசாபர்பூர், பாட்னா ஆகிய நகரங்கள் நவீன நகரங்களாக  மேம்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நவீன நகரங்கள் இயக்கத்தின் நோக்கம், முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளைஏற்படுத்துவதுடன், மக்களுக்கு வாழ்க்கைத் தரம், தூய்மை மற்றும் நிலையான சூழலை வழங்குவதும் ஆகும்.  நவீன முறையில் தீர்வு காண்பதற்கான நடைமுறைகளை பயன்படுத்துவதன் மூலம்  குடிமக்களுக்கு நிலையான மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கிய நடவடிக்கைகளில்   கவனம் செலுத்தப்படும். மேலும் சிறிய பகுதிகளில் மாதிரி கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், பிற நகரங்களில் கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு கலங்கரை விளக்கமாக அமையும். பீகாரில் உள்ள நகரங்கள் உட்பட ஒவ்வொரு நகரத்தின் நவீன நகரங்களுக்கான திட்டம் குடிமக்கள் விரிவான ஈடுபாட்டின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு நகரங்களில் உள்ள குடிமக்களின் தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றில் உள்ள, வேறுபாடுகளுக்கேற்ப நவீன நகரங்களுக்கான திட்டங்கள் மற்றும் அதற்கான முன்னுரிமைகள்,  நகரத்திற்கு நகரம் மாறுபடும். விமான நிலையங்கள் மூலம் நகரங்களின் இணைப்பை உறுதி செய்வது நவீன நகரங்கள் இயக்கத்தில் கட்டாயமாக்கப்படவில்லை.

இந்தியாவில் புதிய பசுமை  விமான நிலையங்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வழங்கும் பசுமை விமான நிலையங்கள் (ஜிஎஃப்ஏ) கொள்கை, 2008-ஐ மத்திய அரசு வகுத்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. பசுமை விமான நிலைய  கொள்கையின்படி, விமான நிலையத்தை நிறுவ விரும்பும் ஒரு விமான நிலைய மேம்பாட்டாளர் அல்லது அந்தந்த மாநில அரசுகள்  www.civilaviation.gov.in என்ற இணையதளத்தில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு முன்மொழிவை அனுப்ப வேண்டும்.

இதற்கான ஒப்புதலை பெறுவதற்கு 2-நிலைகளில் செயல்முறை உள்ளது.  அதாவது `தள அனுமதி’ அதைத் தொடர்ந்து `கொள்கையில்’ ஒப்புதல். இந்தக் கொள்கையின்படி, மத்திய சிவில் விமான போக்குவரத்துக்கு அமைச்சகம், விமான நிலையங்களை அமைப்பதற்காக அவ்வப்போது மாநில அரசுகள் அல்லது விமான நிலைய மேம்பாட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளைப் பெறுகிறது. உரிய ஆய்வுக்குப் பிறகு, புதிய பசுமை விமான நிலையத்தின் மேம்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்படுகிறது.

நிலம் கையகப்படுத்துதல், திட்ட நிதியுதவி, பிற கட்டாய அனுமதிகளைப் பெறுதல் போன்ற திட்டத்தின் பல்வேறு நிலைகளை செயல்படுத்துவதற்கான பொறுப்பு, சம்பந்தப்பட்ட விமான நிலைய மேம்பாட்டாளர் அல்லது மாநில அரசிடம் உள்ளது. தற்போது, நாட்டில் 140  விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன, அவற்றில் மூன்று பீகாரில் உள்ளன, அவை. கயா, பாட்னா மற்றும் தர்பங்கா விமான நிலையங்கள்.

மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஸ்ரீ கவுஷல் கிஷோர் இந்தத் தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814400

 

***************


(Release ID: 1814528)
Read this release in: English , Urdu