பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மிகப்பெரிய சாதனங்கள் / தளங்களின் மூன்றாவது ஆக்கப்பூர்வமான உள்நாட்டு மயமாக்கல் பட்டியலை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை வெளியிடுகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 APR 2022 3:14PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா’வை அடைவதற்கு மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பாதுகாப்பு அமைச்சகம் மூன்றாவது ஆக்கப்பூர்வமான உள்நாட்டு மயமாக்கல் பட்டியலை வெளியிடவிருக்கிறது. இதனை புதுதில்லியில் 2022 ஏப்ரல் 7 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிடுவார். இந்த மூன்றாவது பட்டியலில் மிகப்பெரிய சாதனங்கள் / தளங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை 2025 டிசம்பருக்குள் உள்நாட்டிலேயே உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

 ஏற்கனவே 101 சாதனங்களின் முதலாவது பட்டியல் 2020 ஆகஸ்ட் 21-லும், 108 சாதனங்களின் இரண்டாவது பட்டியல் 2021 மே 31-லும் வெளியிடப்பட்டன. தற்போது மூன்றாவது பட்டியலின் 100-க்கும் அதிகமான சாதனங்கள் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இவற்றை தயாரிக்கவும், ஆர்டர்களாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,10,000 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814072

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1814110) வருகையாளர் எண்ணிக்கை : 225
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi