ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை: தமிழகத்தில் பயனடைந்துள்ள கிராமங்களின் விவரம்

Posted On: 28 MAR 2022 2:54PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஜல் சக்தி இணை அமைச்சர் திரு. பிரகலாத் சிங் படேல் கீழ்காணும் தகவல்களை வழங்கினார். 

தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்) 2020-21 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை நிலைநிறுத்துவதையும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை அமைப்பில் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதுமுள்ள 6,02,105 கிராமங்களில், 57,273 கிராமங்கள் திடக்கழிவு மேலாண்மை அமைப்பாலும், 31,822 கிராமங்கள் திரவக்கழிவு மேலாண்மை அமைப்பாலும் பயனடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 12525 கிராமங்களில், 12153 கிராமங்கள் திடக்கழிவு மேலாண்மை அமைப்பாலும், 177 கிராமங்கள் திரவக்கழிவு மேலாண்மை அமைப்பாலும் பயனடைந்துள்ளன

தமிழ்நாட்டிற்கு 2018-19-ம் ஆண்டில் ரூ 760.99 கோடியும் 2019-20-ல் ரூ 137.80 கோடியும், 2020-21-ல் ரூ 162.89 கோடியும் தூய்மை இந்தியா இயக்கத்தின் (கிராமப்புறம்) கீழ் மத்திய அரசு பங்காக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810470

*************


(Release ID: 1810705) Visitor Counter : 886
Read this release in: English , Manipuri , Bengali