ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நடுத்தர பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தா பிரிவினருக்கு வீடுகள்

Posted On: 22 MAR 2022 6:11PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஊரக வளர்ச்சித்  துறை இணை அமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள பயனாளிகளுக்கு இந்த நிதியாண்டின் போது 80 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று 2022-23-ம் ஆண்டிற்கான தமது பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார்.

கிராமப் பகுதிகளில் 52 லட்சம் வீடுகள் மற்றும் நகர்புற பகுதிகளில் 28 லட்சம் வீடுகள் என இந்த 80 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன. இதற்காக ரூபாய் 48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு எனும் இலக்கை எட்டுவதற்காக பிரதமரின் வீட்டு வசதித்  திட்டத்தை (கிராமப்புறம்) 2016 ஏப்ரல் 1 முதல் ஊரக வளர்ச்சி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி சிறந்த வீடுகளைக்  கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2022 மார்ச் 16 நிலவரப்படி 2.28 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 1.75 கோடி வீடுகளுக்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 2022-23-ம் நிதியாண்டில் பிரதமரின் வீட்டு வசதித்  திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 52.78 லட்சம் வீடுகளுக்கான பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808302

*************


(Release ID: 1808398)
Read this release in: English