குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்ககளுக்கான செயல்பாட்டு மூலதனம் கிடைக்கச் செய்தல்

Posted On: 21 MAR 2022 2:26PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றுநோயின் நிதிப் பாதிப்பைச் சமாளிக்க குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) நிதி உதவி வழங்குவதற்கு அரசாங்கம் பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது. இவற்றில் பின்வருவன அடங்கும்:

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) - அதிகபட்ச திட்டச் செலவு ரூ. 25 லட்சம், இதில் மூலதனச் செலவு மற்றும் செயல்பாட்டு மூலதனம் அடங்கும்.

கடன் உத்தரவாதத் திட்டம் (CGS) - அதிகபட்சம் 85% உத்தரவாதம், காலக்  கடன் மற்றும் செயல்பாட்டு மூலதனம் ஆகிய இரண்டிற்கும்  ரூ200 லட்சம் கடன் வசதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. . 2022-23 பட்ஜெட் அறிவிப்பின்படி, அதிகரித்த கடன் ஓட்டத்தை எளிதாக்கஇந்த திட்டத்தின் கீழ் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் வசதி வழங்கப்படும்.

எமர்ஜென்சி கடன்  உத்தரவாதத் திட்டம் (ECLGS) - மே, 2020 இல் தற்சார்பு இந்தியா திட்டத் தொகுப்பின்  ஒரு பகுதியாக, MSMEகள் உட்பட வணிக நிறுவனங்களுக்கு  தானியங்கியாக இணை இலவசக்  கடன்களை வழங்குவதற்காக அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில், உத்தரவாதத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பு ரூ. 3 லட்சம் கோடி பின்னர் அது ரூ. 4.5 லட்சம் கோடி. 2022-23 பட்ஜெட் அறிவிப்பின்படி, இக்கடன் திட்டம்  மார்ச் 2023 வரை நீட்டிக்கப்படுகிறது, இதன் மூலம் ரூ. 5 லட்சம் கோடி. கூடுதல் உத்தரவாதத் தொகை கிடைக்கும். இந்த வகையில்  ரூ. 50,000 கோடி விருந்தோம்பல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் ஸ்ரீ பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.

                                                                                                *********************

 


(Release ID: 1807926) Visitor Counter : 289
Read this release in: English , Gujarati