மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கோவிட் பெருந்தொற்று காலத்தில் கல்வி
Posted On:
14 MAR 2022 5:57PM by PIB Chennai
மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, மக்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
அனைவருக்கும் சமமான பள்ளி கல்வி கிடைப்பதை உறுதி செய்ய, முழுமையான கல்வி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-19ம் ஆண்டு தொடங்கியது. இது தேசிய கல்வி கொள்கை 2020-வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதும் பள்ளி கல்வியை பாதித்தது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்க நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இது பள்ளி மாணவர்களின் கல்வியில் தடையை ஏற்படுத்தியது. மாணவர்கள் இடையே ஏற்படும் கல்வி பாதிப்பை போக்க, முடக்க காலத்திலும் மற்றும் அதற்கு பின்பும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மாற்று கல்வி அட்டவணையை தயார் செய்தது. இதில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வார அடிப்படையிலான கல்வி திட்டம் உள்ளது. இதில் பாடங்களில் உள்ள தலைப்புகள் மற்றும் கருப்பொருளில் சுவாரஷ்யமான நடவடிக்கைகள் மற்றும் சவால்கள் உள்ளன. இதில் மின்னணு பாடங்களுக்கான இணைப்புகளும் உள்ளன.
நிபுன் பாரத் என்று அடிப்படை கல்வி மற்றும் எண்ணறிவுக்கான தேசிய திட்டத்தை முழுமையான கல்வி திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சகம் கட்தாண்டு ஜூலை 5ம் தேதி தொடங்கியது.
மேலும், பிரதமரின் இ-வித்யா திட்டமும் தொடங்கப்பட்டது. இது கல்விக்கான டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் அணுகலை வழங்கியது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தரமான பள்ளி கல்வியை வழங்க திக்ஷா என்ற தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குகிறது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்வயம் பிரபா டி.வி சேனல் உள்ளது. ரேடியோ மூலம் கல்வி கற்க சிக்ஷா வாணி உள்ளது. பார்வையற்ற மற்றும் காதுகேளாத மாணவர்களின் கல்விக்காக டைசி என்ற முறையும், என்ஐஓஎஸ் இணையளத்தில் செய்கை மொழி சிறப்பு பாடங்களும் உருவாக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805881
***********************
(Release ID: 1805973)
Visitor Counter : 2494