சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இரத்த சோகை முக்த் பாரத் ரத்த சோகை இல்லா பாரதம்: தமிழக நிலவரம்

Posted On: 04 FEB 2022 5:30PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

ரத்த சோகை இல்லா பாரதம் எனும் திட்டம் 2018-ஆம் ஆண்டு, இந்திய அரசு அறிமுகப்படுத்தியது, பெண்கள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் போன்ற நோய்களால் பாதிக்கப்படக்கூடிய வயதினருக்கு ரத்தச் சோகையைக் குறைக்க, தடுப்பு மற்றும் குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் இது வழங்குகிறது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5-ன் (2019-21) படி ஆறு குழுக்களிடையே இரத்த சோகையின் பாதிப்பு வருமாறு: ஆண்களில் 25.0 சதவீதம் (15-49 வயது) மற்றும் பெண்களில் 57.0 சதவீதம் (15-49 வயது), வளரிளம் ஆண்களில் 31.1 சதவீதம் (15-19 வயது) , வளரிளம் இளம்பெண்களில் 59.1 சதவீதம், கர்ப்பிணிப் பெண்களில் (15-49 வயது) 52.2 சதவீதம் மற்றும் குழந்தைகளில் (6-59 மாதங்கள்) 67.1 சதவீதம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5-ன் படி, 6-59 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் 57.4 சதவீதம், 15-49 வயது கர்ப்பிணிப்  பெண்களிடையே 53.6 சதவீதம், 15-49 வயது கர்ப்பிணி பெண்களிடையே 48. 3 சதவீதம், 15-49 வயதுடைய பெண்கள் இடையே 53.4 சதவீதம், வளரிளம் பெண்களிடையே (15-19 வயது) 52.9 சதவீதம் மற்றும் வளரிளம் ஆண்களிடையே (15-19 வயது) 24.6 சதவீதம் ரத்த சோகை நிலவியது.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-4-ன் படி, 6-59 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் 50.7 சதவீதம், 15-49 வயது கர்ப்பிணிப் பெண்களிடையே 55.4 சதவீதம், 15-49 வயது கர்ப்பிணிப் பெண்களிடையே 44. 4 சதவீதம், 15-49 வயதுடைய பெண்கள் இடையே 55 சதவீதம், வளரிளம் பெண்களிடையே (15-19 வயது) 54.2 சதவீதம் மற்றும் வளரிளம் ஆண்களிடையே (15-19 வயது) 26 சதவீதம் ரத்த சோகை நிலவியது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795421

 

----



(Release ID: 1795535) Visitor Counter : 746


Read this release in: English , Urdu