நிதி அமைச்சகம்

மத்திய அரசின் வட்டி மாற்றங்களுடன் கூடிய பங்குபத்திரம் 2028, 6.54 சதவீத அரசு பங்குகள் 2032 ஆகியவற்றின் விற்பனைக்கான ஏலம் (மறுவெளியீடு)

Posted On: 24 JAN 2022 6:01PM by PIB Chennai

மத்திய அரசின் வட்டி மாற்றத்துடன் கூடிய பங்குபத்திரங்கள் 2028, ரூ.4,000 கோடிக்கும், அரசு பங்கு, 2032-ல் 6.54 சதவீதத்தை ரூ.13,000 கோடிக்கும், அரசு பங்கு 2061-ல் 6.95 சதவீதத்தை ரூ.7,000 கோடிக்கும் ஏலம் மூலம் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.   இந்த ஏலம் ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலகத்தால், 2022, ஜனவரி 28ம் தேதி நடத்தப்படும்.

அறிவிக்கப்பட்ட பங்கு விற்பனையில் 5 சதவீதம் வரை தகுதியான தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் போட்டியற்ற முறை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும்.

போட்டியுடன் கூடிய, போட்டியற்ற ஏலங்கள் இரண்டையும், ரிசர்வ் வங்கியின் இ-கூபர் அமைப்பில் ஜனவரி 28ம் தேதி மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.  போட்டியற்ற ஏலத்தை காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள்ளும், போட்டியுடன் கூடிய ஏலத்தை காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள்ளும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஏல முடிவுகள் ஜனவரி 28ம் தேதி அறிவிக்கப்படும். ஏலம் எடுத்தவர்கள் பணத்தை ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792214

************



(Release ID: 1792278) Visitor Counter : 136


Read this release in: Punjabi , English , Urdu , Hindi