மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தொழில்நுட்ப கற்றல் வசதிகள்.
Posted On:
20 DEC 2021 4:58PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த கல்வி இணை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
தேசிய கல்வி கொள்கையில் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய அத்தியாயம் 23 ,மற்றும் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் கல்வி பற்றிய அத்தியாயம் 24 உள்ளது. அனைத்து கொள்கை முன் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன.
தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்புக்கான செயல் திட்டம் 2021 ஜூலை 29 அன்று பாரத பிரதமரால் தொடங்கப்பட்டது. டிஜிட்டல் உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்கான பன்முகக் கல்வி சூழல் கட்டமைப்பை இது வழங்குகிறது. பள்ளி வாரியங்கள், தன்னாட்சி அமைப்புகள், கற்பவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், குறிப்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் சுயாட்சியை இது உறுதி செய்கிறது.
நிஷ்தா எனப்படும் ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது "ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சியின் மூலம் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான" திறன் மேம்பாட்டுத் திட்ட மாகும்.. https://itpd.ncert.gov.in // எனும் இணைப்பில் இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783481
*******************
(Release ID: 1783649)