தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

முதல் காலாண்டு பொருளாதார கணக்கெடுப்பில், 9 துறைகளில் வேலைவாய்ப்பு 29 சதவீதம் அதிகரிப்பு .

Posted On: 20 DEC 2021 3:01PM by PIB Chennai

அகில இந்திய அளவில் காலாண்டுக்கான வேலைவாய்ப்பு  கணக்கெடுப்பை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 9 துறைகளில் வேலை வாய்ப்பு 3.08 கோடியாக அதிகரித்துள்ளது.  இது 2013-14 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 6வது பொருளாதார கணக்கெடுப்பில் 2.37 கோடியாக இருந்தது. தற்போது 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஐடி / பிபிஓ துறையில் அதிகபட்சமாக 152 சதவீதம் வளர்ச்சி பதிவாகியுள்ளது. சுகாதாரத்துறையில் 77 சதவீதமும், கல்வித்துறையில் 39 சதவீதமும், உற்பத்தி துறையில் 22 சதவீதமும், போக்குவரத்து துறையில் 68 சதவீதமும், கட்டுமானத்துறையில் 42 சதவீதமும் பதிவாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783415

                                                                                ********************

 

 



(Release ID: 1783597) Visitor Counter : 196


Read this release in: English , Urdu , Marathi , Hindi