ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிசான் ரயில்கள் மூலம் வேளாண் பொருட்களின் போக்குவரத்து

Posted On: 17 DEC 2021 4:29PM by PIB Chennai

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

கடந்த 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிக்கப்பட்டதன் படி, கிசான் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது. இதன் மூலம் அழுகக் கூடிய காய்கறி, பழங்கள், மாமிசம், கோழி, மீன் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து தேவையுள்ள இடங்களுக்கு கொண்டு இப்பொருட்கள் செல்லப்படுகின்றன.  கிசான் ரயில் சேவைகள்,தேவை அடிப்படையிலானது. தொலை தூரங்களில் உள்ள மிகப் பெரிய சந்தைக்கு வேளாண் பொருட்களை கொண்டு செல்ல, கிசான் ரயிலை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.  இந்த ரயலில் வேளாண் பொருட்களை கொண்டு செல்வதற்கு பதிவு செய்வதில் குறைந்த பட்ச வரம்பு ஏதும் இல்லை. இதன் மூலம் சிறு விவசாயிகள், மிகப் பெரிய சந்தைகளுக்கு அடைய முடிகிறது.

 

                                                                                ******************

 

 


(Release ID: 1782815)
Read this release in: English , Urdu , Telugu