ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகள் / சக்கர நாற்காலி பயணிகளுக்காக ரயில்வே மேற்கொண்டுள்ள நடவடிக்கைள்

Posted On: 17 DEC 2021 4:32PM by PIB Chennai

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

மாற்றுத்திறனாளி பயணிகளின் உபயோகத்துக்கு ஏற்ற வகையில் இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளை, ஐசிஎப்-நிறுவனத்துடன்  இணைந்து இந்திய ரயில்வே வடிவமைக்கிறது. இதில் சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில்  வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகலமான கதவு, அகலமான படுக்கைகள், அகலமான கதவுகள் கொண்ட கழிவறைகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்படுகின்றன. இந்த ரயில் பெட்டி, சரக்கு ஏற்றும் பகுதி மற்றும் கார்டு வேனுடன் இணைந்திருக்கும்.

இந்த ரயில் பெட்டி  லிங்கே கஃப்மன் புஷ்க்  (LHB) 2-ம் பொருட்கள் , கார்ட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெட்டி  (LSLRD) என அழைக்கப்படுகிறது. இந்த வகை ரயில் பெட்டிகளை உருவாக்கும்பணி ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782699

                                                                                ****************

 

 


(Release ID: 1782790) Visitor Counter : 187
Read this release in: English , Urdu