புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமயமலை பகுதியில் ஆய்வு.

प्रविष्टि तिथि: 15 DEC 2021 3:07PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த புவி அறிவியல் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள மேல் காளி கங்கை பள்ளத்தாக்கில் பனிப்பாறைகளை ஆய்வு செய்து வந்த வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி  ஆராய்ச்சியாளர்கள், பெயரிடப்படாத பனிப்பாறை ஒன்றின் போக்கு திடீரென மாறி, அருகில் உள்ள சும்சுர்க்சங்கி பனிப்பாறையுடன் இணைந்ததாக கண்டறிந்தனர்.

பருவநிலை மாற்றம் மற்றும் டெக்டோனிக்ஸ் எனப்படும் புவி ஓட்டின் தாக்கம் இதற்கு  காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரிடர்களுக்கு தீர்வு காண இமயமலைப் பகுதியில் மேலும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை அரசு ஊக்குவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781701

                                *************

 

 

 

 


(रिलीज़ आईडी: 1781939) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu