சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகள்/ஜூவல்லர்/ஹால்மார்க்கிங் சென்டருக்கு எதிரான புகார்களுக்கு பிஐஎஸ் மூலம் தகுந்த நடவடிக்கை

प्रविष्टि तिथि: 14 DEC 2021 12:45PM by PIB Chennai

தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டது. தங்க நகைகள்/கலைப்பொருட்களின் தூய்மை/ நேர்த்தித்தன்மை  ஆகியவை BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களால் சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப்படுகின்றன.

BIS  தங்கம் மட்டுமல்லாதுவெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் செய்யும் திட்டத்தையும் கொண்டுள்ளது. மதிப்பீட்டு மையத்தின் மூலம் தூய்மை/நேர்த்தித்தன்மையை சரிபார்த்த பிறகு, தங்கம்/வெள்ளி நகைகள்/கலைப்பொருட்களில் தூய்மை/நேர்த்தித்தன்மை  குறிக்கப்படுகிறது, இதன் பின்னர்  நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் நகைகளை/கலைப்பொருள்களை  சாதாரண நுகர்வோருக்கு விற்கிறார்கள்.

சில சட்டவிரோத நகை விற்பனையாளர்கள்  / ஹால்மார்க்கிங் மையங்களால் வாடிக்கையாளர்கள் குறைந்த தூய்மை / நேர்த்தித்தன்மையால்  ஏமாற்றப்படும் அரிதான நிகழ்வுகள் நடந்துள்ளன. BIS சமீபத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தைக் கண்டது, அதில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒரு புகழ்பெற்ற நகைக்கடைக்காரரிடமிருந்து வெள்ளி  தட்டுகள் மற்றும் ஒரு டம்ளரை வாங்கினார். வாங்கப்பட்ட பொருட்களின் தூய்மையை சந்தேகித்து, வாடிக்கையாளர் ஹால்மார்க்கிங் மையத்தில் அதையே சோதித்து, தூய்மைச் சான்றிதழைக் கேட்டார். அதை மறுத்தபோது, வாடிக்கையாளர் ஹால்மார்க்கிங் மையத்தில் நெறிமுறையற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்து சந்தேகம் அடைந்தார். இதனை அடுத்து அவர்   BIS இல் புகார் செய்ய தயங்கவில்லை.

BIS, புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிக்கலை விசாரித்து, சட்டவிரோத ஹால்மார்க்கிங் மையத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தது. மற்றும் வாடிக்கையாளருக்கு தேவையான தீர்வுகளை உறுதி செய்தது. முழு விசாரணையின் போது, வாடிக்கையாளரும் என்னென்ன நடக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் மிகவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய BIS எடுத்த நடவடிக்கைகள் குறித்து நன்கு அறியப்பட்டது.

BIS ஒரு சேவை அமைப்பாக இருப்பதால், பொதுவான நுகர்வோரை மிகவும் மதிக்கிறது, மேலும் நகைக்கடை அல்லது ஹால்மார்க்கிங் மையத்தால் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம்/வெள்ளி நகைகள்/கலைப் பொருட்களில் தூய்மை/நேர்த்தித்தன்மை  ஆகியவற்றில் எந்தவொரு பொது மக்களும் ஏமாற்றப்பட்டால், அவர்கள்  தயவு கூர்ந்து . அருகிலுள்ள கிளை அலுவலகத்திற்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது BIS இணையதளம்/கடிதம் /தொலைபேசி/மின்னஞ்சல்/complaint  போர்டல் மூலமாகவோ அல்லது BIS CARE APP மூலமாகவோ (Googleplay இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்) BIS-க்கு புகார் அளிக்கலாம்.   புகாரின்மீது BIS உடனடி நடவடிக்கை எடுக்கும் மற்றும் நுகர்வோருக்கு தேவையான தீர்வு உறுதி செய்யப்படும்.

பொது மக்கள் நலன் கருதி வெளியிடுவோர் : இந்திய தர நிர்ணய அமைவனம்(BIS ),தெற்கு மண்டல அலுவலகம், IV கிராஸ் ரோடு, சிஐடி வளாகம், தரமணி, சென்னை -600113  . தொலைபேசி 044 22541442 /22541584 மின்னஞ்சல் sro@bis.gov.in. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து www.bis.gov.in ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது BIS Care APP ஐப் பதிவிறக்கம் செய்யவும் என பிஐஎஸ்-ன் நுகர்வோர் விவகாரம் மற்றும் வணிகப்பிரிவு துணை இயக்குநர் திரு. எச். அஜய் கண்ணா கூறியுள்ளார்.

********


(रिलीज़ आईडी: 1781233) आगंतुक पटल : 266
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English