பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு தளவாடங்களின் உள்நாட்டு உற்பத்தி

Posted On: 13 DEC 2021 3:00PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

பாதுகாப்பு தளவாடங்களில் உள்நாட்டு வடிவமைப்பு, உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு பல கொள்கை நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது குறையும்.

2020-21ம் ஆண்டில் பாதுகாப்புத்துறைக்கு மொத்தம் ரூ. 1,18,860.52 கோடிக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் இந்திய நிறுவனங்களிடமிருந்து ரூ.76, 073.98 கோடிக்கும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ. 42,786.54 கோடிக்கும் கொள்முதல் செய்யப்பட்டன. இந்திய நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய கொள்முதல் 64 சதவீதம் ஆகும். இதேபோல் இதற்கு முந்தைய இரு நிதியாண்டுகளிலும், இந்திய நிறுவனங்களிடம் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780867

                                                                                                ***************

 

 


(Release ID: 1781086) Visitor Counter : 144
Read this release in: English , Urdu