பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புப் படைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2021 3:48PM by PIB Chennai

உச்சநீதிமன்றம் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, பாதுகாப்புப் படையில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ராணுவ காவல்படையில் 1,700 பெண்களை படிப்படியாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நடைமுறையில் முதல் தொகுதிப் பெண்கள் ராணுவ காவல் படையில் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்துள்ளனர்.

ராணுவத்தில் 0.59 சதவீதமும், கடற்படையில் 6 சதவீதமும், விமானப்படையில் 1.08 சதவீதமும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட், மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில்  கூறியுள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780096

---


(வெளியீட்டு அடையாள எண்: 1780244) வருகையாளர் எண்ணிக்கை : 239
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali