சுற்றுலா அமைச்சகம்

கடலோர மற்றும் படகு சுற்றுலா திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு : திரு ஜி.கிஷன் ரெட்டி தகவல்

Posted On: 09 DEC 2021 5:15PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி அளித்த பதிலில் கூறியதாவது:

சுதேஷி தர்ஷன் திட்டத்தின் கீழ் கடலோர சுற்றுலா பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் படகு சுற்றுலாவுக்கான சாத்தியங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. படகு சுற்றுலாவுடன், சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவது அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பு. ஆனாலும் இத்திட்டங்களுக்கு தேவையான நிதியுதவியை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வழங்குகிறது.

 இது தவிர சாகர்மாலா திட்டத்தையும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது. இது நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான தேசிய திட்டம். இந்தியாவின் 7,500 கி.மீ தூர கடலோர பகுதி, மற்றும் 14,500 கி.மீ தூர  நீர்வழி போக்குவரத்து பாதைகளை பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் துறைமுகம் உட்பட சில பகுதிகளில் படகு சுற்றுலா / கடலோர சுற்றுலா திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இவற்றின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779777

                                               ****************



(Release ID: 1779922) Visitor Counter : 133


Read this release in: English , Urdu , Hindi