ஜல்சக்தி அமைச்சகம்

தமிழகத்தில் இதுவரை 11.78 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

Posted On: 09 DEC 2021 4:22PM by PIB Chennai

2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊரகப் பகுதி குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் நோக்கத்துடன் மாநில அரசுகளுடன் இணைந்து ஜல்ஜீவன் இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

05.12.2021 வரை நாட்டில் மொத்தம் உள்ள 19.22 கோடி கிராமப்புற வீடுகளில் 8.61 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2021-22-ம் ஆண்டில் இதுவரை 11.78 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மக்களவையில் எழுத்துமூலம்அளித்த பதிலில் ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779739

----



(Release ID: 1779880) Visitor Counter : 143


Read this release in: English , Urdu