ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவிசார் குறியீடுகள் சட்டத்தின் கீழ் 65 முக்கிய பாரம்பரிய கைத்தறி துணிவகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

Posted On: 08 DEC 2021 4:49PM by PIB Chennai

நாட்டில் கைத்தறி நெசவாளர்களின் நலனை பாதுகாக்க கைத்தறிகள் மூலம் நெய்யப்படும் துணிவகைகளின் உற்பத்திக்காக, மத்திய அரசு 1985-ம் ஆண்டின் கைத்தறிகள் சட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. கைத்தறிகள் உற்பத்திக்காக 11 ஜவுளி பொருட்கள், சில தொழில்நுட்ப குறிப்புகளுடன் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளனஇந்த சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தகுதியுள்ள  மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாநில கைத்தறிதுறைகளும், மத்திய அரசின் கள அதிகாரிகளும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 கைத்தறிகளில் நெய்யப்படும் பொருட்களுக்கு பிரத்யேகமான கைத்தறி அடையாளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை பிரபலப்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1999- ஆம் ஆண்டின் புவிசார் குறியீட்டு பொருட்கள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் 65 முக்கிய பாரம்பரிய கைத்தறி உற்பத்தி பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு பாதுகாப்பு வழங்க சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களவையில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிவில் ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷின் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779317

                                                                                               ************

 


(Release ID: 1779432)
Read this release in: English , Urdu