பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

கொரோனா காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு

Posted On: 08 DEC 2021 3:44PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

குழந்தைகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு தொடர்ச்சியான ஊட்டச்சத்து ஆதரவை உறுதி செய்வதற்காக, கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை பயனாளிகளின் வீடுகளுக்கே அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சென்று ஊட்டச்சத்து பொருட்களை விநியோகித்தனர்.

பெருந்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டன. சமூக கண்காணிப்பு, விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பிற வேலைகளில் உள்ளூர் நிர்வாகத்திற்கு அங்கன்வாடி பணியாளர்கள் உதவினார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைக்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்  திட்டத்தின் கீழ் அங்கன்வாடி சேவைகள், இளம்பெண்களுக்கான திட்டம் மற்றும் பிரதமரின் மாத்ரு வந்தனா போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2020-21-ம் வருடத்தில் ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ 5,31,279.08 லட்சமும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்  திட்டத்திற்கு ரூ 26,10,031.55 லட்சமும் மத்திய நிதி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779261

****

 

(Release ID: 1779261)



(Release ID: 1779348) Visitor Counter : 159


Read this release in: English , Urdu