பாதுகாப்பு அமைச்சகம்

எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணை அமைப்பு

Posted On: 03 DEC 2021 2:35PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 அமைப்பை வாங்குவதற்கான ஒப்பந்தம் 05 அக்டோபர் 2018 அன்று கையெழுத்தானது.

பாதுகாப்பு உபகரணங்களின் கொள்முதலைப் பாதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் அரசாங்கம் அறிந்திருக்கிறது. முழு அளவிலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்காக ஆயுதப்படைகளை தயார் நிலையில் வைத்திருக்க, அச்சுறுத்தல், செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் அரசாங்கம் இறையாண்மை  முடிவுகளை எடுக்கிறது.

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுக்களின் படி இந்த அமைப்புகள் கிடைக்கப்பெறும் .

எஸ்-400 ஏவுகணையானது மிகப் பெரிய பரப்பளவுக்கு தொடர்ச்சியான மற்றும் திறம்பட்ட  வான் பாதுகாப்பு அமைப்பை அளிப்பதற்கான சக்திவாய்ந்த அமைப்பாகும். இதன் மூலம் நாட்டின் வான் பாதுகாப்பு திறன் கணிசமாக மேம்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777612



(Release ID: 1777713) Visitor Counter : 197


Read this release in: English , Urdu , Bengali