புவி அறிவியல் அமைச்சகம்

நிலச்சரிவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு தமிழ்நாட்டில் சோதனை செய்யப்படுகிறது

Posted On: 02 DEC 2021 2:11PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொற்ப்பு) இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

நிலச்சரிவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் முறை ஒன்றை பிரிட்டிஷ் புவிவியல் ஆய்வு அமைப்புடன் இணைந்து இந்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் புவியியல் ஆய்வு அமைப்பு உருவாக்கியுள்ளது.

இது தற்போது இந்தியாவில் இரண்டு பகுதிகளில் (டார்ஜீலிங் மாவட்டம். மேற்கு வங்கம் மற்றும் நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு) சோதனை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

நாட்டில் பனிப்பாறை தொடர்பான பேரிடர்களுக்கான எச்சரிக்கை அமைப்பை புவியியல் ஆய்வு அமைப்பு இதுவரை உருவாக்கவில்லை.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777174

******



(Release ID: 1777322) Visitor Counter : 185


Read this release in: English , Bengali