ஜவுளித்துறை அமைச்சகம்

விவசாயிகளுக்கு நேரடி ஆதரவு அளிப்பதற்காக 2014-15 முதல் 2020-21 வரை இந்திய பருத்தி நிறுவனத்திற்கு ரூ 17,408 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை நிதி

Posted On: 10 NOV 2021 5:13PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதை நோக்கிய மற்றுமொரு நடவடிக்கையாக, விவசாயிகளுக்கு நேரடி ஆதரவு அளிப்பதற்காக 2014-15 முதல் 2020-21 வரை இந்திய பருத்தி நிறுவனத்திற்கு (சிசிஐ) ரூ 17,408 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை நிதிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

மிக முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாக திகழும் பருத்தி, சுமார் 58 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், சுமார் 400-500 லட்சம் பேர் பருத்தி பதப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் போன்ற தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

2020-21 பருத்தி பருவத்தில், பருத்தி சாகுபடியின் பரப்பளவு 133 லட்சம் ஹெக்டேராக இருந்தது, 360 லட்சம் பேல்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மொத்த உலகளாவிய பருத்தி உற்பத்தியில் இது  25% ஆகும்.

 

கடந்த இரண்டு பருத்தி பருவங்களில் (2019-20, 2020-21) காணப்பட்ட உலகளாவிய பெருந்தொற்றின் போது, நாட்டின் பருத்தி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை, அதாவது சுமார் 200 லட்சம் பேல்களை சிசிஐ கொள்முதல் செய்து ரூ.55,000 கோடிக்கு மேல் சுமார் 40 லட்சம் பருத்தி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தியுள்ளது.

 

தற்போதைய பருத்தி பருவத்தில் (அதாவது அக்டோபர் 2021- செப்டம்பர் 2022), 143 மாவட்டங்களில் 474 கொள்முதல் மையங்களைத் திறப்பதன் மூலம், அனைத்து 11 பெரிய பருத்தி வளரும் மாநிலங்களிலும் போதுமான ஏற்பாடுகளை சிசிஐ ஏற்கனவே செய்துள்ளது. பருத்தியில் குறைந்தபட்ச ஆதரவு செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக சிசிஐ-க்கு அரசு முழு விலை ஆதரவை வழங்குகிறது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770571

 

****



(Release ID: 1770737) Visitor Counter : 181


Read this release in: English , Urdu , Hindi