தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அஞ்சல்களைக் கையாள சிறப்பு ஏற்பாடுகளை தில்லி அஞ்சல் வட்டம் செய்துள்ளது

Posted On: 21 OCT 2021 3:37PM by PIB Chennai

தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அஞ்சல்களைக் கையாள சிறப்பு ஏற்பாடுகளை தில்லி அஞ்சல் வட்டம் செய்துள்ளது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் தபால் துறை தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் தில்லியின் 34 முக்கிய தபால் அலுவலகங்கள் மற்றும் 2 ரயில்வே மெயில் சேவை அலுவலகங்கள், அதாவது தில்லி ரயில் நிலையம் மற்றும் புது தில்லி ரயில் நிலையங்களில், சிறப்பு தபால் மையங்கள் அமைக்கப்படுகின்றன.

கடைசி நிமிட நெரிசலைத் தவிர்க்க, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைச் சரியான நேரத்தில் அனுப்ப வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765457

************



(Release ID: 1765561) Visitor Counter : 259


Read this release in: English , Urdu , Hindi