சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சென்னையில் வருமான வரி அதிகாரிகள் குடியிருப்பை இன்று திறந்து வைத்தார்

Posted On: 30 SEP 2021 7:13PM by PIB Chennai

சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக  வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக 65 கோடி ரூபாய் செலவில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சிகரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வருவாய் செயலர் திரு. தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் திரு. மொஹபத்ரா, வருமான வரித்துறை தலைமை ஆணையர் திரு. டி. சி. பட்வாரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

*************

 


(Release ID: 1759734)
Read this release in: English