பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் திரு பீட்டர் டுட்டனுடனான இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் அறிக்கை புதுதில்லி, செப்டம்பர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2021 5:30PM by PIB Chennai

ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் மேன்மைமிகு திரு பீட்டர் டுட்டன் மற்றும் அவர் தலைமையிலான உயர்மட்ட குழுவை அவரது முதல் அதிகாரப்பூர்வ இந்திய பயணத்தின் போது வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் திருமிகு மாரிஸ் பாய்னுடன் கொவிட்-19 சரவதேச பெருந்தொற்றுக்கு இடையிலும் இந்தியாவுக்கு அவர் வந்திருப்பது நமது இருதரப்பு உறவுக்கு ஆஸ்திரேலியா அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

அமைச்சர் திரு டுட்டனுடன் நமது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து பலனளிக்கும் விரிவான ஆலோசனையை நான் நடத்தினேன். இந்திய-ஆஸ்திரேலிய விரிவான கூட்டின் முழு திறனையும் அடைய பணிபுரிவதற்கு நாங்களிருவரும் ஆர்வமாக உள்ளோம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753878

 

----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1753987) வருகையாளர் எண்ணிக்கை : 274
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi