பாதுகாப்பு அமைச்சகம்

விமானப் படை மத்திய கணக்கு அலுவலகத்தின் 75-வது ஆண்டு விழாவை ஒட்டி சிறப்பு உறையை விமானப் படை தளபதி வெளியிட்டார்

Posted On: 09 AUG 2021 5:12PM by PIB Chennai

விமானப் படை மத்திய கணக்கு அலுவலகத்தின் 75-வது ஆண்டு விழாவை ஒட்டி, 2021 ஆகஸ்ட் 9 அன்று அவ்வலுவலகத்திற்கு விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா வருகை புரிந்தார். ராணுவ தபால் சேவையுடன் இணைந்து சிறப்பு உறை ஒன்று வெளியிடப்பட்டது.

விமானப்படையின் அனைத்து பிரிவுகள் மற்றும் நிலைகளில் உள்ளவர்களின் ஊதியம், படிகள், வருங்கால வைப்புத்தொகை உள்ளிட்ட கணக்குகளுக்கான தலைமை அலுவலகமாக விமானப் படை மத்திய கணக்கு அலுவலகம் விளங்குகிறது.

1945-ம் ஆண்டு ராயல் அக்கவுன்ட்ஸ் பேஸ் பம்பாயில் தொடங்கப்பட்டதில் இருந்து விமானப் படை மத்திய கணக்கு அலுவலகத்தின் பயணம் ஆரம்பிக்கிறது. 1946-ல் சென்னைக்கு மாற்றப்பட்ட இந்த அலுவலகம், 1947-ம் ஆண்டு புதுதில்லிக்கு மாற்றப்பட்டது.

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விமானப் படை மத்திய கணக்கு அலுவலகம், முறையான கணக்கு தீர்வுகளுடன் விமானப்படையினருக்கு உத்வேகம் அளித்து வருகிறது. சிறப்பான பங்களிப்புக்காக, ‘விமானப்படை தலைவர் பட்டயம்விமானப் படை மத்திய கணக்கு அலுவலகத்திற்கு 2020-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744111

****************

 



(Release ID: 1744234) Visitor Counter : 164


Read this release in: English , Urdu , Hindi