சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை விமான நிலையத்தில் 773 கிராம் தங்கம் பறிமுதல்

Posted On: 24 FEB 2021 5:42PM by PIB Chennai

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட  773 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்

துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்த, சிவகங்கையைச் சேர்ந்த மஹ்தோம் ஷேக் ஹைதர் அலி(23)  என்பவரை சுங்க அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.

அப்போது அவர்  3 பொட்டலங்களில் 863 கிராம் தங்க பசையை உடலில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 அவற்றிலிருந்து 773 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.

 இவற்றின் மதிப்பு ரூ.37.17 லட்சம். கடத்தி வரப்பட்ட தங்கம், சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு, ஷேக் ஹைதர் அலி கைது செய்யப்பட்டார்

இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.



(Release ID: 1700479) Visitor Counter : 38


Read this release in: English