நிதி அமைச்சகம்

2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டிஆர்-9 மற்றும் ஜிஎஸ்டிஆர் 9 சி வருடாந்திர தாக்கல்

Posted On: 09 OCT 2020 5:30PM by PIB Chennai

69/2020 எண்ணுடைய 30.09.2020 தேதியிட்ட மத்திய வரி அறிவிக்கையின் படி, 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான வருடாந்திர தாக்கலுக்கான கடைசி தேதி 2020 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான தானியங்கி ஜிஎஸ்டிஆர்-9-இல் (4, 5, 6 மற்றும் 7-ஆம் பெட்டிகள்) 2017-18-ஆம் நிதி ஆண்டுக்கான தரவுகளும் இருப்பதாக சில தகவல்கள் கிடைக்கப் பெற்றன.

ஆனால், 2017-18-ஆம் நிதி ஆண்டுக்கான தாக்கல்கள் வரி செலுத்துவோரால் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன. 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டிஆர்-9 படிவத்தில் இரு வருடங்களுக்கான (2017-18 மற்றும் 2018-19) தரவுகளை தனியாகக் காட்டும் வசதி இல்லை.

எனவே, 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான தகவல்களை மட்டும் வரி செலுத்துவோர் பதிவு செய்தால் போதும் என்று தெளிவுப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள 2017-18-ஆம் நிதி ஆண்டுக்கான தகவல்களை புறக்கணித்து விடலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663175

-----



(Release ID: 1663252) Visitor Counter : 216


Read this release in: English , Urdu , Hindi