புவி அறிவியல் அமைச்சகம்
அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
Posted On:
13 SEP 2020 6:56PM by PIB Chennai
வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரத்தில் மேற்கு மத்திய வங்கக் கடல் மீது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தென் இந்தியாவின் பல பகுதிகளிலும், மகாராஷ்டிராவிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை சில பகுதிகளில் நாளை (2020 செப்டம்பர் 14) அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 15,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கடலோர கர்நாடகா, வடக்கு உட்புற கர்நாடகா, தெற்கு உட்புற கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இடங்களிலும் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் மிக அதிக மற்றும் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1653856
(Release ID: 1653863)
Visitor Counter : 127