புவி அறிவியல் அமைச்சகம்

மே மாதத்திற்கான வானிலை நிலவரம், சரிபார்ப்பு மற்றும் அடுத்த நான்கு வாரங்களுக்கான நிலவரம் குறித்து இந்திய வானிலைத்துறையின் அறிக்கை

Posted On: 16 JUN 2020 8:30PM by PIB Chennai

இந்திய வானிலைத்துறை, 2020 மே மாதத்திற்கான வானிலை நிலவரம், அதன் சரிபார்ப்பு மற்றும் அடுத்த நான்கு வாரங்களுக்கான (ஜூன் 5 முதல் ஜூலை 2 வரை) நிலவரம் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. மே மாதத்தில் உம்-பன் புயல்,  அதனையடுத்து  தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, ஒடிசாவிலும், மேற்கு வங்காளத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும், மழை குறித்த வானிலை கணிப்பில் ஏற்பட்ட  சிற்சில தவறுகள், தென்மேற்கு பருவமழையின் முன்னேற்றம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த அறிக்கையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1631963

-----


(Release ID: 1632038)
Read this release in: English , Hindi