புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேறியுள்ளது

Posted On: 11 JUN 2020 9:21PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளதாவது:

  • இன்று, தென்மேற்கு பருவமழை, மத்திய அரபிக்கடலின் சில பகுதிகள், கோவா மொத்தம், கொங்கனின் சில பகுதிகள், மத்திய மகாராஷ்டிரா மற்றும் மரத்வாடா, கர்நாடகாவின் எஞ்சிய பகுதிகள், ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவின் பெரும்பான்மை பகுதிகள், தெற்கு சத்தீஷ்கர் மற்றும் தெற்கு ஒடிசாவின் சில பகுதிகள், மேற்கு மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலின் சில பகுதிகள், மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் நாகாலாந்தின் எஞ்சிய பகுதிகள்,   அருணாசலப்பிரதேசத்தின் பல பகுதிகள், அசாம், மேகாலயா மாநிலங்களின் சில பகுதிகள் ஆகியவற்றில் மேலும் முன்னேறியுள்ளது.
  • பருவமழையின் வடஎல்லை, ஹர்ணாய், சோலாப்பூர், ராமகுண்டம், ஜக்தல்பூர், கோபால்பூர், அகர்தலா, சபர்முக், தேஸ்பூர் வழியாகச் செல்கிறது.
  • மத்திய அரபிக் கடல் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகள், தெலங்கானாவில் எஞ்சிய பகுதிகள், வங்கக் கடலின் மேற்கு மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள், அருணாசலப்பிரதேசம், அசாம், மேகாலயா, சிக்கிம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகிக் கொண்டுள்ளது.

----



(Release ID: 1631076) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi