புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்குப் பருவமழை, மேற்கு மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலின் சிலபகுதிகளில் மேலும் முன்னேறியுள்ளது

प्रविष्टि तिथि: 09 JUN 2020 9:27PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளதாவது:

  • தென்மேற்கு பருவமழை மேற்கு மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் மேலும் முன்னேறியுள்ளது.
  • பருவமழையின் வடஎல்லை, கார்வார், ஷிமோகா, தும்குரு, சித்தூர், சென்னை ஆகிய இடங்கள் வழியாகச் செல்கிறது.
  • மத்திய அரபிக் கடலின் சில பகுதிகள், கோவா, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் ராயலசீமாவின் சில பகுதிகள், தமிழ்நாட்டின் எஞ்சியுள்ள பகுதிகள், ஆந்திரப்பிரதேசத்தின் கடலோரப் பகுதி மற்றும் தெலங்கானாவின் சில பகுதிகள், வங்கக் கடலின் மத்திய வடக்குப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகிக் கொண்டுள்ளது.
  • மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவின் சில பகுதிகள், ராயலசீமாவின் சில பகுதிகள், ஆந்திரப்பிரதேசத்தின் கடலோரப் பகுதி ஆகியவற்றிலும், வங்கக் கடலின் சில பகுதிகளிலும் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், ஒடிசாவின் சில பகுதிகள் மற்றும் மேற்கு வங்கத்தில் கங்கை நதிப்பகுதி ஆகியவற்றிலும் தென்மேற்கு பருவமழை, அடுத்த 48  மணி நேரத்தில் மேலும் முன்னேறுவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

----


(रिलीज़ आईडी: 1630609) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Manipuri , Bengali