PIB Headquarters

ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தன

Posted On: 10 DEC 2019 12:46PM by PIB Chennai

சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தில் திங்கட்கிழமை அன்று கொழும்புவிலிருந்து வந்திறங்கிய  முகமது ஹிமாஸ் (வயது 28) என்பவரை, வெளியேறும் வழியில் சுங்கத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மலக்குடலில் ரப்பர் இழையால் 3 பொட்டலங்களில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டார். 510 கிராம் எடையுள்ள ரூ.19.8 லட்சம் மதிப்பிலான அந்த தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவத்தில் ஷார்ஜாவிலிருந்து ஏர்இந்தியா விமானத்தில் சென்னை வந்திறங்கிய திண்டுக்கல்லை சேர்ந்த ஆயுஷா சித்திகா (வயது 32) என்பவரை வெளியேறும் வழியில் தடுத்து சோதனையிட்டனர். அப்போது சானிடரி நாப்கினுக்குள் ரப்பர் இழையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொட்டலத்தைக் கண்டுபிடித்தனர். அதில் இருந்த 291 கிராம் எடையுள்ள ரூ.11.3 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அண்ணா சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

************



(Release ID: 1595689) Visitor Counter : 52


Read this release in: English