பிரதமர் அலுவலகம்

பாங்காக்கில் ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமரின் இருதரப்பு சந்திப்புகள்

Posted On: 03 NOV 2019 2:34PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான்-ஓ-சா, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோருடன் தனித்தனியான சந்திப்புகளை நடத்தினார்.

 

இந்த இருநாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தத் தலைவர்களுடன் விவாதித்ததாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

 

பிரதமர் ப்ரயூத் சான்-ஓ-சா-வுடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது.   இந்தியா-தாய்லாந்து இடையே ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கான வழிகள் பற்றி நாங்கள் பேசினோம்.  தாய்லாந்து அரசு மற்றும் மக்களின் மிகச்சிறப்பான விருந்தோம்பலுக்காக அவருக்கு நான் நன்றி கூறினேன். 

 

 

அதிபர்  ஜோகோவியை சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்.  இன்று எங்களின் பேச்சுக்கள் விரிவானதாக இருந்தன.  வர்த்தகம், கலாச்சாரம் போன்ற துறைகளில் இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். 

 

 

**************



(Release ID: 1590300) Visitor Counter : 127