பிரதமர் அலுவலகம்
பாங்காக்கில் ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமரின் இருதரப்பு சந்திப்புகள்
Posted On:
03 NOV 2019 2:34PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான்-ஓ-சா, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோருடன் தனித்தனியான சந்திப்புகளை நடத்தினார்.
இந்த இருநாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தத் தலைவர்களுடன் விவாதித்ததாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் ப்ரயூத் சான்-ஓ-சா-வுடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது. இந்தியா-தாய்லாந்து இடையே ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கான வழிகள் பற்றி நாங்கள் பேசினோம். தாய்லாந்து அரசு மற்றும் மக்களின் மிகச்சிறப்பான விருந்தோம்பலுக்காக அவருக்கு நான் நன்றி கூறினேன்.
|
அதிபர் ஜோகோவியை சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். இன்று எங்களின் பேச்சுக்கள் விரிவானதாக இருந்தன. வர்த்தகம், கலாச்சாரம் போன்ற துறைகளில் இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
|
**************
(Release ID: 1590300)
Visitor Counter : 127