பிரதமர் அலுவலகம்

ஹூஸ்டனில் காஷ்மீரி பண்டிட்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 22 SEP 2019 7:11PM by PIB Chennai

டெக்சாசின் ஹூஸ்டனில் காஷ்மீரி பண்டிட்களின் தூதுக்குழுவினரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (22.09.19) சந்தித்தார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியர்களின் அதிகாரமளித்தலுக்கும் பிரதமரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்த சமூகத்தின் உறுப்பினர்கள் முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் போது தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலுக்குப் பின் டிவிட்டரில் செய்தி வெளியிட்ட பிரதமர், “ஹூஸ்டனில் காஷ்மீரி பண்டிட்களுடன் சிறப்பான கலந்துரையாடலை நான் நடத்தினேன்” என்று கூறியுள்ளார்.

                                

                                    *****



(Release ID: 1585841) Visitor Counter : 88