பிரதமர் அலுவலகம்

விளையாடு இந்தியா இளைஞர் விளையாட்டுப் கோப்பை போட்டியில் பங்கேற்போருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 09 JAN 2019 8:59PM by PIB Chennai

இன்று புனேவில் தொடங்கவிருக்கும் “விளையாடு இந்தியா” இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இன்று புனேவில் தொடங்கவிருக்கும் விளையாடு இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள எனது அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் போட்டி சிறந்த விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரவும், நமது இளைஞர்களின் விளையாட்டு கனவுகளுக்கு களமாகவும் அமையட்டும்.

அதிகமான விளையாட்டு, சிறந்த உடல்நலம் மற்றும் வலிமை பொருந்திய தேசம்! பிரபல விளையாட்டு வீரர்கள் தங்களின் விளையாட்டு அனுபவங்கள் குறித்து பேசுவதும் ஆடுகளத்தில் அதிக நேரம் செலவழிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது”, என்று பிரதமர் கூறினார்.

******



(Release ID: 1559325) Visitor Counter : 135