ஜவுளித்துறை அமைச்சகம்

எதையும் தாங்கும், எக்குறையுமிலாத: இதுவே ஜவுளி அமைச்சகத்தின் மந்திரம்: நடப்பாண்டு சாதனைகள் 2018

Posted On: 20 DEC 2018 5:21PM by PIB Chennai

பெரும் அளவிலான கச்சாப் பொருள் அடிப்படை மற்றும் அனைத்து மதிப்பீடுகளை உள்ளடக்கிய உற்பத்தித் திறன் ஆகியவற்றைக் கொண்ட இந்தியா, உலகிலேயே மிகப்பெரிய ஜவுளித் துறையை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய ஜவுளித் துறையின் வலிமை,  கைத்தறி மற்றும் ஆலைத் துறையை உள்ளடக்கியதாகும். இத்துறை மொத்த தொழில் உற்பத்தியில் 7 சதவீதம், இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி திறனில் 2 சதவீதம் மற்றும் நாட்டின் அந்நிய செலாவணி வருவாயில் 15 சதவீத பங்களிப்பையும் வழங்குகிறது.

போட்டியை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகில், வளர்ச்சியின் சவால்களை வாய்ப்புக்களாக மாற்றுவதற்கு தேவையான முன்முயற்சிகளை வடிவமைக்கும் துரிதமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி கூறினார். இதனை இலக்காக கொண்டு, சுமுகமான கொள்கை சூழலை உறுதி செய்வதற்கும், தொழிலுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், தனிநபர் தொழில்முனைவோர் மையங்களை அமைப்பதற்கும் தனது பல்வேறு கொள்கை முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களின் மூலமாக ஜவுளித்துறை அயராது பணியாற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

********



(Release ID: 1558831) Visitor Counter : 157


Read this release in: English , Bengali