பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

ஆஷா சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் மேற்பார்வை வருகைக் கட்டண உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 24 OCT 2018 1:21PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் புதுதில்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஆஷா சமூக சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் வருகைக் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

2018-2019 முதல் 2019-2020 வரை இம்மாதம் (அக்டோபர் – 2018) முதல்  மேற்பார்வை வருகைக் கட்டணம் (ஒரு வருகைக்கு) ரூ 250-லிருந்து ரூ.300-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆஷா சுகாதார மேற்பார்வையாளர் மாதந்தோறும் 20 வருகைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த வருகைக் கட்டண உயர்வு மூலம் ஆஷா சுகாதார ஆர்வலர்கள் மாதந்தோறும் இதற்கு முன்பு பெற்ற ரூ.5,000-லிருந்து இனி ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதாவது மாதந்தோறும் இனி ரூ.1,000 கூடுதலாகக் கிடைக்கும்.

                                                         ****



(Release ID: 1550584) Visitor Counter : 119


Read this release in: Marathi , English , Bengali